விபத்தில் பறிபோனது குடும்பஸ்தர் உயிர்!

கிளிநொச்சியில் நேற்று (12) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மைய பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டில் மோதிக் கொண்டதனால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் என்ற 35 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

No comments