கஞ்சா தோட்டம் பிடிப்பட்டது

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பகுதிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் நேற்று (12) முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளை போகஸ்வௌ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் போகஸ்வௌ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments