கிழக்கு பல்கலையில் முதலாம் வருட மாணவன் மீது தாக்குதல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் முதலாம் வருட மாணவன் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று (20) பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதவாம் ஆண்டு மாணவன் மீது மூன்றாம் ஆண்டு மாணவர்க குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

No comments