தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (10) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் முற்றங்கள் மைதானத்தில் அமைந்துள்ள தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நிறைவுத் தூபியில் இவ் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரிற்குமாக பொது சுடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments