"தமிழ் கடல்"நெல்லைக் கண்ணன் கைது, தீவிர போராட்டத்துக்கு தாயாராகும் தமிழகம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த காணொளி  சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நெல்லை கண்ணன் மீது  பாஜகவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும், தனித்தனியாக புகார் அளித்தனர். பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

காவல்துறையினர் தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியான நிலையில், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் நேற்று அனுமதிக்கப்பட்டார். நெல்லை கண்ணன் கைது செய்யப்படாததை கண்டித்து எச்.ராஜா தலைமையில் பாஜகவினர் இன்று மெரினாவில் போராட்டம் நடத்திட, இந்து அமைப்புகள் பலவும் நெல்லை கண்ணனை கைது செய்ய தொடர்ந்து வலியுறுத்தின.
இந்நிலையில் தற்போது பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நெல்லை கண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லைக் கண்ணன் கைதுக்கு பல்வேறு கட்சியினரும் , சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் , இந்த கைது தமிழக காவல்துறையின்  பக்கச் சார்பான ஆரஜகப் போக்கையே காட்டுவதக தெரிவித்ததோடு ,தமிழகவாழ்வுரிமை கூட்டமைப்பையும் நாளை முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார், எனவே ஏற்கனவே குடியுரிமைச் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் நடுவே தமிழ் கடல் நெல்லை கண்ணன் கைது செய்தமை மேலும் போராட்டங்களை தீவீரப்படும் என எதிரப்பர்கப்படுகிறது.

No comments