டொனால் டிரம்பைச் சூழும் நெருக்கடிகள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம், செனட் அவைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவருக்கு எதிரான விசாரணை வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான ஜோ பிடனை விசாரிக்க உக்ரைன் மீது அவர் அழுத்தம் கொடுத்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த ஜனநாயக கட்சி, அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை செனட்டுக்கு அனுப்பவும், அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது குற்றச்சாட்டு விசாரணைக்கு எடுக்கவும் வாக்கெடுப்பு இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இதில் தீர்மானத்தை செனட் அவைக்கு அனுப்ப மக்கள் பிரதிநிதிகள் அவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான தீர்மானத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோச்சி கையெழுத்திட்டார்.

ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான ஜோ பிடனை விசாரிக்க உக்ரைன் மீது அவர் அழுத்தம் கொடுத்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த ஜனநாயக கட்சி, அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை செனட்டுக்கு அனுப்பவும், அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது குற்றச்சாட்டு விசாரணைக்கு எடுக்கவும் வாக்கெடுப்பு இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இதில் தீர்மானத்தை செனட் அவைக்கு அனுப்ப மக்கள் பிரதிநிதிகள் அவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான தீர்மானத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோச்சி கையெழுத்திட்டார்.

No comments