யாழில் மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்
வடக்கு மாகாணத்தில் இளடம்பெறும் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .
குறித்த போராட்டம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு முன்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இன்றைய போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிறோஸ், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment