வெள்ளை வான் விவகாரம்: சுமந்திரனும் களத்தில்!


வெள்ளை வான் விவகாரத்தில் ராஜிதாவை காப்பாற்ற சுமந்திரனும் களமிறங்கியுள்ளார்.

வெள்ளை வான் விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என அவர் விளக்கமளித்துள்ளார்.

வெள்ளை வான் பற்றி விசாரணை நடத்தாமல் அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைவான் விவகாரம் தொடர்பாக அவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா? அத்தகைய சம்பவங்கள் எங்கு நடைபெற்றது? அவற்றுக்கு வேறு சாட்சிகள் உள்ளதா? என்று ஆராயப்பட வேண்டும் என்றும் அதுவே முக்கியமானதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments