ஏ-9வீதியில் துப்பாக்கி சூடு:ஒருவர் காயம்?


முறிகண்டி ஏ-9 வீதியில் இலங்கை பொலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.வீதியால் பயணித்த தென்னிலங்கை பதிவை உடைய குறித்த வாகனத்தை நிறுத்த முற்பட்ட போதும் வாகனம் நிறுத்தப்படாமையாள் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை வேளை வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிஸாNரு துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர்.

காயமடைந்த பொதுமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இன்று காலை ஆய்வுகளை செய்திருந்தனர். 

No comments