மலையகத்தில் மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது


நாட்டின் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (17 ) பிற்பகல் வௌியிடப்பட்ட இந்த அறிக்கை இன்று (18) பிற்பகல் 03.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஹெல்ல, கலவானை, ரத்தினபுரி மற்றும் எஹலியகொடை போன்ற பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அதேபோல், கேகாலை மாவட்டத்தின் வரகாபொல மற்றும் தெஹிஓவிட போன்று பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ளது.

No comments