பிரியா நடேசன் குடும்பத்திற்கு ஆதரவாக இன்றும் போராட்டம்


இலங்கைத் தமிழ் குடும்பமொன்றை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான தடையை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நீடித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா ஆகியோர் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்திருந்தனர். அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த கோபிகா (4), தருணிக்கா (2) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

இக்குடும்பத்தினரை அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த வாரம் நாடு கடத்தத் தீர்மானித்தது.
இத்தீர்மானத்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் தலைநகர் மெல்பர்ன் உள்ளிட்ட பல நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

எனினும், இந்த தீர்மானம் தொடர்பில் அவுஸ்திரேலிய சமூக செயற்பாட்டாளர்களால் மெல்பர்ன் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டதையடுத்து, இன்று புதன்கிழமை வரை இந்தத் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் குறித்த குடும்பத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments