மாணவர்கள் செல்லும் வாகனங்கள் குறித்து சோதனை!

கிளிநொச்சி போக்குவரத்து பொலிசாருடன் இணைந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகன்கள் தொடர்பில் விசேட சோதனை ஒன்றை இன்று (10) மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சோதனை இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது,

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டன.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் குறித்த விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது

No comments