எடப்பாடிக்கு பாராட்டு விழா! ஸ்டாலின் உறுதி;

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்த்துள்ளார் , கோவையில் திமுக அரசியல் பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் 220 நிறுவனங்கள் தொழில் தொடங்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் சென்று பேசியுள்ளார். எந்த ஊரில் எந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்திலும் அதன்பிறகும் தொடர்ந்து பேசியுள்ளேன். இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் 5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அவை எங்கே என்றே இன்னும் தெரியவில்லை.
தற்போது அமெரிக்கா சென்று 2780 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. முதலீடுகளை வந்தால் மகிழ்ச்சிதான். அதனை பாராட்டுகிறோம். முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் என்றால் திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

No comments