காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளை உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 900 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது மகன் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தனது மகனான நாகராசா நகுலேஸ்வரன் என்பவரை தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments