காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு!

கடந்த 25ம் திகதி முதல் காணாமற் போன மூதாட்டியினை தேடி அலைந்த உறவினர்கள் காகங்களின் கரைதலினால் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மதியம் யாழ்ப்பாணம் கொட்டடியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த இளைதம்பி சொர்ணம்மா (வயது -90) என்ற மூதாட்டியே சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

No comments