போதையில் அடிதடி; இருவர் கைது.

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் குழப்பம் செய்த இரண்டு சந்தேகநபர்களை நேற்றிரவு (01) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹொரவ்பொத்தான மற்றும் கோமரங்கடவல பகுதிகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனவும் 23 மற்றும் 28 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிங்கள மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் மது அருந்திவிட்டு குழப்பம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments