அதிரடியாக கைதான இராணுவ அதிகாரி; பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவகொட்டுவ சந்தியில் நேற்று முன்திம் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த இருவர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்கள் 10 உடன் கூடிய மெகசின் ஒன்றுடன் கைதாகியிருந்தனர்.

புத்தள இராணுவ முகாமில் கடமையாற்றும் குருணாகல், தாஹிகமுவ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய இராணுவச் சிப்பாயும், நிட்டம்புவ, வதுபிட்டிவல விஜயபா பாபல ரெஜிமேன்டின் இராணுவ அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டை குருணாகல் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் வீட்டில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று, அதனை சுத்தம் செய்வதற்கான கருவிகள், இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட ரைபல் ஒன்று, துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் தொலைநோக்கு கருவி ஒன்று, போரா 12 துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் வெற்று தோட்டாக்கள் 6, இராணுவத்தினர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் 2, பெல்ட் ஓடர் 2 மற்றும் பல பொருட்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களை நேற்று குருணாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 48 மணிநேர தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

No comments