இத்தாவில் சுற்றி வளைப்பில் ஐவர் கைது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட பளை - இத்தாவில் பகுதியில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசி தகவலுக்கமைய இடம்பெற்ற சுற்றுவளைப்பின் போது கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் பளை பொலிஸார் கைது செய்தனர்.

அர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டது.

No comments