அரியாலையில் கிரனைட் மீட்பு!


அரியாலை, அருளம்பலம் வீதியில் பழைய கிரனைட் மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பழைய வீடொன்றை, வீட்டு உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் பணியை இன்று (19) காலை ஆரம்பித்துள்ளார்.

துப்பரவு பணியின் போது, கிணற்றிற்குள் இருந்து ஒரு கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்கள் எடுக்கப்பட்டமை தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில், பொலிஸார் துப்பரவு பணியை நிறுத்தி வைத்துள்ளதுடன், வெடிபொருட்கள் தொடர்பில் பரிசோதனை செய்யவும் நீதிமன்றின் அனுமதியை பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments