ஷஹ்ரானின் கணினியில் முக்கிய தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்தியதாக கூறப்படும் மடிக்கணினியிலிருந்து பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர தெரிவித்தார்.

குறித்த மடிக் கணினி தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் உள்ளதாகவும், அது சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு அறையில் விசேட பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments