நீதிக்காக ஏங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

No comments