காணி புகுந்து மூவரை தாக்கிய நபர்கள் - கிளியில் சம்பவம்!

கிளிநொச்சி முரசு மோட்டை மருதங்குளம் பகுதியில் வயல் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பினர், காணி உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட மூவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். 
அவர்கள் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரான பெண் ஒருவர் இம்முறை சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

No comments