மீண்டும் இரு ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா

வடகொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை நடத்தியுள்ளது என தென்கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியான வான்சான் பகுதியிலிருந்து ஏவுகணைகள் 430 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்கக்கூடியது என தென்கொரியா கூறியுள்ளது.

20 நிமிட இடைவெளியில் குறித்த ஏவுகணைகளை ஏவப்பட்டன. சுமார் 430 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவை பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

No comments