மந்திகை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் மருத்துவர் ஆளணிகள் பற்றாக்குறையால், சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமும் 600 க்கு மேற்பட்ட மக்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர். நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் கடமையாற்ற வேண்டிய வெளிநோயாளர் பிரிவில் ஓரிரு மருத்துவர்களே பணியாற்றுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments