பெட்டிக்கடை தீப்பற்றி எரிந்து நாசம்!

யாழ் வட்டுக்கோட்டை மாவடிச் சந்தியில் அமைந்திருந்த வெற்றிலைக் கடை தீப்பற்றி எரிந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது.

மின்னிணைப்பே இல்லாத அந்தப் பெட்டிக்கடையில் எவ்வாறு தீப்பற்றியது என காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசமிகளால்  தீவைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்து வருகின்றது.

No comments