பரஸ்பரம் மீனவர்கள் விடுதலை!




இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்யத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வடபுல சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் பதிலுக்கு விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்தமையை தொடர்ந்து, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் சில தினங்களில் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் முன்னதாக இலங்கை ஜனாதிபதி டெல்லி சென்ற போது இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இதன் பிரகாரம் இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லை தாண்டிச்சென்றாலும் கைது செய்யப்படவோ சிறையில் அடைக்கப்படவோ கூடாதெனவும் முடிவு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.  

No comments