விபத்தில் காவல்துறை உறுப்பினர் பலி!

பன்குளம் பகுதியில் பாரவூர்தியுடன் உந்துருளி மோதியதில் உந்துருளியில் பயணித்த காவல்துறை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் காவல்துறை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஹொரவ்பொத்தான - கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பாரவூர்தி ஓட்டுநர் கைது செய்துள்ளார். உயிரிழந்த காவல்துறை உறுப்பினரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை உடற்கூறு ஆய்புகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments