கொள்கை வழியே கூட்டு: கஜேந்திரகுமார்!


கொள்கை வழிக்கூட்டே முக்கியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பங்கெடுத்த நிகழ்வொன்றிலேயே பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க கூட்டத்தில் வைத்து தெரிவிததுள்ளார்.

தமிழ் மக்களிற்கான மாற்று அணிக்கான கூட்டு என்பது கொள்கை அடிப்படையிலான கூட்டாக அமையவேண்டுமே தவிர வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கான கூட்டாக இருக்ககூடாது.

அல்லாவிடின் தந்தை செல்வா சொன்னதற்கும் அப்பால், தமிழினத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும் எனவும் அமரர் தர்மராஜா நினைவு உரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றிரவு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டிற்கு காத்திருப்பதாக சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் கஜேந்திரகுமார் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்.

No comments