பாதுகாப்பு கருதி பீஸ் தொலைக்காட்சிக்கு தடை!

இலங்கையில் நடந்த  தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இஸ்லாமிய மத அடிப்படை காரணங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியவைகளை தடை செய்வதோடு , தணிக்கையும் செய்துவருகின்றது அரசு.

இதன் ஒரு பகுதியாக இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துத்தும் தொலைக்காட்சிகளை  தடை செய்வதென முடிவெடுத்த இலங்கை அரசு, இதுபற்றி டயலாக், எஸ்.எல்.டி. ஆகிய நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதன்படி  துபாய் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் இஸ்லாமிய அறிஞர் ஜாஹிர் நாயக் நடத்தும், ‘Peace TV’ நேற்று நள்ளிரவு முதல்  ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஜாஹிர் நாயக்கின் மதப் பிரசாரங்களுக்கு இந்தியா, பங்களா தேஷ் ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments