உழவூர்தி விபத்து! ஒருவர் பலி! நால்வர் காயம்!

உழவூர்தி தடம் புரண்டதில் ஒருபிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு பழைய முறிகண்டிப்பகுதியிலிருந்து மன்னார் இலுப்பைக்கடவைக்கு நேற்று காலை சென்ற உழவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

துணுக்காய் சந்தியிலிருந்து கல்விளான் சந்தியூடாக இலுப்பைக்கடவை நோக்கிப்பயணித்த போது உழவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவூர்திப்பெட்டி தடம் புரண்டுள்ளது.

இதில் பெட்டியில் இருந்த பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நால்வர் உடனடியாக மல்லாவி வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இரண்டுபேர் மல்லாவி வைததியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பழைய முறிகண்டியைச்சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

ஊயிரிழந்தவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலிருந்து உடல்கூறு ஆய்வு மற்றும் விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

No comments