எரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்!
இதனால் தேவாலயத்தின் கோபுரம் முற்றாக எரிந்து, சரிந்து விழுந்ததுள்ளது.
இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் கோபுரத்தில் தீ பற்றி எரிந்தது. இத்தீவிபத்தினால் பாரிஸ் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடியிருந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை மட்டுமன்றி உலக வாழ் கிறிஸ்தவர்களையும் கவலையடைய செய்துள்ளது.
Notre Dame cathedral தேவாயலத்தைப் பார்வையிட ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment