சுழியோடி கண்ணாடி அணிந்த ரவுடிகள் பிடிபட்டனர்!

யாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தபட்டவர்கள் என்ற அடிப்படையில் 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டன என்று மானிப்பாய் காவல்துறை பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

சந்தேகத்துக்குரியவர்கள் வாள் வெட்டு சம்பவங்களுக்கு செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களது கைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் இவர்களை  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் மேலும் தெரிவித்தினர்.

No comments