தபால் மூலம் பணப்பட்டுவாடா ! கட்சிகளின் கண்டுபிடிப்பு!

பாராளுமன்ற தேர்தல் நாள் நெருங்கும் நேரத்தில் பணப்பட்டுவாடா பஞ்சமில்லாமல்   நடைபெற்று வருகிறது அதில் புது புது யுக்திகளை காட்சிகள் கண்டு பிடித்து செய்து வருகின்றன அதிலும் குறிப்பாக,தங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு  ஒரு கட்சியினர் சென்னை பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த சிலருக்குக் கடிதத்துடன் 500 ரூபாய் பணம் அனுப்பியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த  வாக்காளர்களுக்கு கடிதத்தோடு 500 ரூபாய் பணம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட வேட்ப்பாளருக்கு வாக்கு அளிக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரம்பூர் மட்டுமல்லாமல் வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 2,000 பேருக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments