ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் பலி! உறுதிப்படுத்திய மரபணு !

பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கி வந்த  ஐ. எஸ் பயங்கரவாதக் குழுவின் தலைவர் அபு டார் பலியானது  மரபணுச் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புஅமைச்சர் டேல்பின் லோரேன்சானா அந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் இராணுவம் அபு டாரின் மரணம் குறித்து அறிவித்திருந்தபோதும்  அபு டாரி தான என்ற சந்தேகம் இருந்ததினால்  மரபணுச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஐ. எஸ் பயங்கரவாதக் குழுவோடு தன்னை இணைத்து  Maute குழுவுக்கு அவர் தலைவராக இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments