யானை அட்டகாசம்! வர்த்தக நிலையத்தை இழந்தார் உரிமையாளர்!

மட்டக்களப்பு மாவடிஓலைப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகநிலையம் மற்றும் வீடு ஒன்றை யானை அடித்து நொருக்கித் துவசம் செய்துள்ளது.

நேற்றிரவு சனிக்கிழமை வர்த்தக உரிமையாளர் குடும்பத்துடன் உறங்கிக்கொண்டிருந்த வேளை வர்த்த நிலையத்தின் பின் பகுதியில் தாக்கி தாக்கியுள்ளது.

சத்தம் கேட்டு எழுந்த வர்த்தக உரிமையாளர் செல்லத்துரை யோகேஸ்வரன் யானை கடையை உடைப்பதை அறிந்து யானையை விரட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

முயற்றிகள் எதுவும் பலனளிக்காத நிலையறிந்து உரிமையாளர் குடும்பத்துடன் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.

யானை வர்த்த நிலயத்தை உடைத்து பொருட்களை உண்டுவிட்டு ஏனைய பொருட்களை துவசம் செய்துவிட்டுச் சென்றுள்ளது.

Batticalo

No comments