பாசிசத்தை வேரறுக்க மக்கள்தான் நீதிபதிகளாக இருக்கவேண்டும்,வைகோ!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் மக்கள் நிதிபதிகளாக இருந்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். ஜனநாயகம் நிலைக்குமா அல்லது பாசிச மனோபாவம் கொண்ட அரசு நீடிக்குமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.

எல்லா வகையிலும் மத்திய அரசு தமிழக அரசையை வஞ்சிக்கிறது. எனவே மக்கள் நீதிபதிகளாக இருந்து இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

No comments