யாழில் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலம் மீது மோதிய காரால் பரபரப்பு
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் முன்பாக இன்று (23-04-2019) காலை வாகனம் ஒன்று மோதியதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது.
நீதிபதி கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். நகா் , கச்சேரி - நல்லூா் வீதியில் அமைந்துள்ள நீதிபதியின் இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. இதில் நீதிபதி இல்ல வாயில், அருகிலுள்ள வீட்டு சுவா் ஆகியவை இதனால் உடைந்து சேதமாயின.
அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் முறிந்தது.
இதுவேளை, சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸாா் வாகனத்தை தீவிர சோதனை செய்தனா். வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளாா்.
மேலதிக விசாரணைகள் தொடா்ந்து இடம்பெற்று வருகின்றன.
Post a Comment