கொலையாளியை சந்திக்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.


தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவங்களின் சூத்திரதாரியான பாதுகாப்பு படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை  இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சஞ்சே மித்ரா சந்திக்கவுள்ளார்.

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று (07), நாட்டை வந்தடைந்த இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சஞ்சே மித்ரா இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பாதுகாப்பு படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

குறிப்பாக அவரது பாதுகாப்பு படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுடனான சந்திப்பு மனித உரிமை செயற்பாட்டாளர்களது கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments