கிறிஸ்தவ மதத்தினரின் பதாதை அடித்துடைப்பு!

யாழ்.செம்மணி வீதியில் கிறிஸ்தவ   (சபை)  மதத்தினை சார்ந்தவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

செம்மணி பகுதியில் உள்ள யாழ்.வளைவுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை  செம்மணி ஈஸ்வரர் என அழைத்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிவலிங்கம் வைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகிலும் , சற்று தொலைவிலுமாக கிறித்தவ சபை ஒன்றினை சார்ந்தவர்கள் என நம்பப்படும் சிலரால் பதாதைகள் வைக்கபட்டன.அதனை அவதானித்த இந்து மதத்தை சேர்ந்த சிலர் பதாதை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை நாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இரு தரப்பினரையும் சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments