குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி - 475 பேர் காயம்
இன்று காலை வேளையில் கொழும்பு கொச்சிக்கடை, சங்ரிலா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி , நீர்கொழும்பு கட்டான மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரை 140 பேர் உயிர் இழந்துள்ளனர். 475 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் - 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை - 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை - 64 மரணங்கள், 110 பேர் காயம், மட்டக்களப்பு வைத்தியசாலையில், 27 மரணங்கள், 75க்கும் மேற்பட்டோர் காயம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
Post a Comment