மட்டக்களப்பு தேவாலயத்தில் வெடிக்கா நிலையில் வெடிகுண்டு மீட்பு

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலம் உள்ளிட்ட நாட்டின் மூன்று தேவாயலங்கள் மற்றும் விடுதிகளில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மட்டக்களப்பில் சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள அதேவேளை மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மேலும் குண்டுவெடிப்புக்கள் நிகழக்கூடும் என மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

இலங்கையில் இன்று உதிர்த்த ஞாயிறு எனப்படும் ஈஸ்ரர் பெருநாள் கொண்டாடப்பட்டுவருகின்றது. இதற்கென இன்று அதிகாலையே தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஆரம்பமாகியிருந்தன. ஒவ்வொரு தேவாயலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

இந்நிலையிலேயே இக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

No comments