ரஜினி அரசியலுக்கு வரமுடியாது! வந்தால் சிறைக்குப் போவார்!

நடிகர் ராஜினிகாந் அரசியலுக்கு வந்தால் சிறைக்குப் போவார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நிலை தொடர்பாக பாரதிய ஜனதா  கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு  அளித்த சறப்புப் நேர்காணலில் பேசும் போது,

அரசியலும், சினிமாவும் ஒன்றில்லை. ரஜினி வர்றார், வர்றார்னு சொல்றாங்க, அவர் எங்கே வர்றார். அடுத்த தேர்தல் வரும் போது, இந்த தேர்தலில் போட்டியில்லை அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன்னு சொல்வார். இது அவருக்கு பழக்கமாகிவிட்டது.

அப்போது என்ன சொன்னார் என்று எனக்கு தெரியும். வந்துவிட்டார், வர்றார், பொதுக்கூட்டம் நடத்துகிறார், அமைப்பு ஆரம்பிக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர் வரமாட்டார் என்று நான் அப்போவே சொன்னேன், அதற்கான காரணம் எனக்கு தெரியும். ரஜினி எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டார். வரமுடியாது. ஒருவேளை வந்தார்னா அவர் உடனடியாக சிறைக்குப் போவார் என எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.

No comments