உலகின் தலைசிறந்த ஆசிரியராக பீட்டர் டபிச்சி தேர்வு !

கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பிற்கும் கென்யா   நாட்டை சேர்ந்த பீட்டர் டபிச்சி  எனும்    கிராமப்புற  பாடசாலை ஆசிரியர் ஒருவர்  "உலகின் தலைசிறந்த ஆசிரியர்"  என்ற விருதை வென்றுள்ளார்.
துபாயில் நடைபெற்ற அந்த நிகழ்வில் அவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசாகக் கொடுக்கப்பட்டது.


 36 வயது நிரம்பிய அந்த  ஆசிரியர் தமது 80 வீதமான வருமானத்தை  ஏழை மக்களுக்குக் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.பீட்டரின் பாடசாலை தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

விருது வென்றது பெரும் மகிழ்ச்சி தருவதாகவும்,  அந்த விருதினை ஆபிரிக்க கண்டத்தில் உள்ள அணைத்து இளையவர்களுக்கு அர்பணிப்பதாகவும்  பீட்டர் டபிச்சி கூறியுள்ளார்.விருது கிடைத்த இவருக்கு அந்நாட்டு மக்கள் சிறப்பு வரவேற்பளித்தனர்

No comments