ஓடித்தப்புகின்றனர் கூட்டமைப்பு பிரதேசசபை செயலாளர்கள்?


கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களது தவிசாளர்கள் தற்போது தமது கடைகளை விரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதன் அரச அதிகாரிகளான் செயலாளர்கள் துண்டை காணோம் துணியினைக்காணோமென தலை தெறிக்க ஓடத்தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தலைவரான தியாகராசா நிரோஸின் தலைவலியால் செயலாளர் தப்பியோடியுள்ள நிலையில் தற்போது வலி வடக்கு பிரதேச சபையில் ஊழல்,அதிகாரதுஸ்பிரயோகம்,நிர்வாக முறைகேடுகள் நடைபெறாமல் தடுத்த பிரதேசசபை செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டை கூட்டமைப்பு சார்பு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் முன்வைத்துள்ளார்.

வலி.வடக்கு பிரதேசசபை தலைவரும் மாவை சேனாதிராசாவின் தனிப்பட்ட செயலாளருமான சுகிர்தனாலேயே குறித்த பிரதேசசபை தவிசாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தனது ஊழல்களிற்கு அவர் ஒத்துழைக்கவில்லையென தெரிவித்தே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ச.சஜீவன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

No comments