வெளிக்கிளம்பும் பேரினவாத பூதம்

இலங்கைக்கு உத்தரவு பிறப்பிக்கும் உாிமை சா்வதேச சமூகத்திற்கு இல்லை. இலங்கையா்கள் நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு உண்டாகாதவகையில் நாமே தீா்மானங்களை எடுப்போம். என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியிருக்கின்றாா். 
வடக்கு மாகாண ஆளுநரின் கொழும்பு கிளை  காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி ல் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் ஜெனிவாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை  செயற்படுத்த தவறிவிட்டது 
என்று குறிப்பிடும் தரப்பினர் சர்வதேச நீதி பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும்.  எமது நாட்டின் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மை அரசியலமைப்பிற்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையில் இருந்து   நீதித்துறையின்  தனித்தன்மை  பேணப்பட்டுள்ளது.  ஆகவே சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கும் முயற் சிகள்  சாத்தியமற்றது. பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்கள்     நாட்டின் சுயாதீனதன்மைக்கு பா திப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றப்படும். 
இதற்கு எத்தரப்பினரும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

No comments