வட்டிக்கு பணம் வாங்கியவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு கடன் பெற்றவாின் வீட்டுக்குள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவரு இரு வரை தலா 2 லட்சம் ரூபாய் பிணையில் செல்ல சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது.

பணம் கேட்கச் சென்றவரும் அவருடன் உதவிக்குச் சென்றவரும் நீதிமன்றினால் தலா இரண்டரை லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடுத்த பணத்தைக் கேட்பதற்காக நால்வருடன் சென்ற நபர், பணம் கொடுக்காது விட்டால் கொலை செய்து விடுவதாக பணம் வாங்கியவரை அச்சுறுத்தியுள்ளார்.

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் மீசாலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இருவரையும் தலா இரண்டரை லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

No comments