ஆவாக்களை ஒழித்துவிட்டோம் - எஞ்சியவர்களை சரணடையச் சொல்கிறது பொலிஸ்

வடக்கில் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட ஆவா குழுவினை தற்போது முற்றாக கைது செ ய்து விட்டதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பொ்ணான்டோ தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரது அலுவலகத்தில் இன்றைய தினம்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவி த்தார்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

வடக்கில் அச்சுறுத்தல் மிக்கதாக கடந்த காலங்களில் ஆவா என்ற வன்முறை குழு காணப்பட் டது. ஆனால் தற்போது அதில் ஒரு சிலரை தவிர ஏனையோரை கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்தியுள்ளோம்.

ஆனால் அவர்களில் சிலர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டு ள்ளது. இதேவேளை இன்னமும் கைது செய்யப்படாத நிலையில் மறைந்திருக்கும் ஆவா குழு உறுப்பினர்களுக்கு தாம்

ஒரு கோரிக்கை விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது அவர்களையும் பொலிஸ் நிலை யங்களிலும் நீதிமன்றங்களிலும் சரண்டைந்து உங்களது வழக்குகளை முடிவுறுத்தி கொள்ளு மாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments