தமிழர் தேசங்களை பௌத்தமயமாக்குவது யாரெனத் தேடுகிறாராம் சுரேன் இராகவன்

தமிழர் தாயப் பிரதேசங்களில் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலைச் செய்துவருபவர்கள் யார் என மகாநாயக்கர்கள் ஊடாக கண்டுபிடிக்கப்போவதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் புதிய கதை ஒன்றினை கூறியுள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் சிறிலங்காவின் ஆட்சியாளர்களே திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைச் செய்துவருகின்றனர்.  கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்போவதாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.

இந்நிலையிலேயே தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை, மகாநாயக்கர்களின் ஆசியுடன் கண்டுபிடிக்கg் போவதாகவும் கூறியிருக்கிறார்.

இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். ஒரு தமிழனாக மாத்திரம் இதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஒரு ஆளுனராக, பௌத்த தத்துவத்தை  மதிக்கின்ற ஒருவராகவும், இது சரியானது அல்ல என்று நான் நினைக்கிறேன்.

நீண்டகாலம் இராணுவத்தினர் தங்கியுள்ள முகாம்கள் போன்ற சிங்களக் குடியிருப்புகளில், தனிப்பட்ட வழிபாட்டு இடங்களை வைத்திருக்க முடியும். அதனை நாம் நிறுத்த முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments