ஆமி வேண்டுமாம்:மொட்டு கட்சியின் வாண்டுகள்!


வவுணதீவு பகுதியில் நடைபெற்ற கொலைகளை தொடர்ந்து தமிழ் மக்களது பாதுகாப்புக்கு இராணுவம் வீதியில் இறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை மஹிந்த தரப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நேற்று கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் பேரணியை நடத்தியிருந்த நிலையில் முல்லைதீவில் நாமல் ராஜபக்ஸ ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் பாடசாலை விடுமுறையிலுள்ள சிறுவர்களை அழைத்துவந்து போராட்டம் நடத்தியுள்ளனர் மஹிந்தவின் மொட்டு கட்சியெனப்படும் பொதுஜன முன்னணியினர்.

மீண்டும் யுத்தம் வேண்டாம் என்று கோரிக்கையினை முன்னிறுத்தியும் தமிழ் மக்களது பாதுகாப்புக்கு இராணுவம் வீதியில் இறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக அவர்கள் நின்றிருந்தனர்.

கொத்துரொட்டி வழங்கப்படுமென சிலர் தம்மை வாகனத்தில் ஏற்றி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments