கூட்டமைப்பின் முடிவு அவசர முடிவு:சிவாஜி!


ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு அவசரப்பட்ட முடிவு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்துவிட்டு பின்னால் இழுபறிபட்டு செல்லமுடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும் டெலோ கட்சியின் நிலைப்பாடு தீர்மானிக்கப்பட்டுவிட்டது.எதிர்வரும் 7ம் திகதிய கூட்டத்தில் இது பற்றி பேசப்பட்டு நல்லதொரு முடிவு எட்டப்படுமென எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு டெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டமைப்பினுள் இருந்து கொண்டு அது போராடுமெனவும் அவர் மேலும் தெரிவி;த்தார்.

ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு தொடர்பில் பங்காளிக்கட்சியான டெலோவின் முக்கியஸ்தர்களான சிவாஜி மற்றும் சிறீகாந்தா ஆகியோர் முரண்பட்டுள்ளமை தெரிந்ததே.

No comments